❓ செடியில் உள்ள கரும்புகை பு+சண நோய் உள்ளது. அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
🌑 இந்த கரும்புகை பு+சண நோய்க்கு காரணம் அசுவினி பு+ச்சிகள் மற்றும் மாவுப்பு+ச்சி ஆகும். மேலும் இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நோய் வருவதைக் குறைக்கலாம்.
🌑 ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 4 கிராம் சு+டோமோனஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து செடிகளின் மீது தௌpக்கலாம்.
❓ சைனோ பாக்டீரியாவின் பயன்கள் யாவை?
🍚 தன்னிச்சையாக உயிர்வாழும் தன்மையுடைய சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடி முறைக்கு தகுந்தவாறு உள்ளது.
🍚 கூட்டு வளர்ச்சி மாறுபட்டு கூடுடைய நீலப்பச்சைப் பாசிகளான நாஸ்டாக், அனபீனா, ஆலுசீரியா மற்றும் பல ஆரம்ப உட்புகுத்தலாக உறையிடப்பட்ட பானைகளில் வளர்க்கப்படுகிறது.
🍚 பின் வயலில் இது பல மடங்காக பெருக்கப்படுகிறது. நெல் வயல்களில் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது.
❓ எபிலாக்னான் பொறி வண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
🍁 எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும்.
🍁 கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானைச் சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்.
❓ கற்பு+ர கரைசல் என்றால் என்ன?
🍸 கற்பு+ர கரைசல் அனைத்து வகையான பயிர்களுக்கும் மிகச்சிறந்த பு+ச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. மேலும் மிகச் சிறந்த பயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது.
🍸 பு+க்கள் வருவதற்கு காரணமான ஹhர்மோன்களை கற்பு+ர கரைசல் தூண்டுவதால் அதிகமான பு+க்கள் உண்டாகி, அதிக மகசு+லைக் கொடுக்கும்.
❓ மாடுகளுக்கு அம்மை நோய் பரவுவதை எப்படித் தடுக்கலாம்?
🐂 மாடுகளுக்கு ஏற்படும் அம்மையைக் குணப்படுத்த மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாட்டை சில நாட்களுக்கு பண்ணையிலிருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
🐂 தடுப்பு+சி முறையாக அளித்து வருவதாலும், கால்நடைகளின் கொட்டகைகளை சுத்தமாக பராமரிப்பதாலும் இந்த நோய் பரவுவதைத் தடுக்கலாம்.